திங்கள், 27 டிசம்பர், 2010

29-ல் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

அக்டோபர்- டிசம்பர் காலாண்டுக்கான மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் என்று, கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சி.மு. ரவிராம் அறிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய, விழுப்புரம் மண்டலத்துக்கான நுகர்வோர் குழுக்களின் மின்வாரிய குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு, விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

விழுப்புரம் மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான மனுக்கள் ஏதேனும் இருந்தால், கடலூர் மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்புமாறும், மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Source: Dinamani

கண் தானம்

பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த விநோதம் அம்மாள் (97) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே. அமர்சந்த் சர்மா, நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்க நிர்வாகி ஒய். ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் செய்தனர்.

Source: Dinamani

புதன், 22 டிசம்பர், 2010

இறப்புச் செய்தி

ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்