சனி, 10 மே, 2008

வரலாறு பாடத்தில் சேவாமநதிர் பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவது இடம்.


பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளிச் சேர்ந்த செல்வி. இனியா என்கிற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2 வது இரண்டத்தைப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் 1036 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விபரம்: தமிழ்: 177, ஆங்கிலம்: 128, கம்ப்யூட்டர் சயின்ஸ்: 173, எகனாமிக்ஸ்:180, புவியியல்:179, வரலாறு: 199.

ஏழை விவசாயியின் மகளான இம்மாணவி டியூஷன் போன்றவைக்கு வசதியில்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தினாலும் தன்னால் இம்மதிப்பெண்களை பெறமுடிந்தது என குறிப்பிட்டதுடன் மேற்கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போவதாக கூறினார்.

பரங்கிப்பேட்டை புத்தகக் கண்காட்சி



அரிதாகி வரும், புத்தக வாசிப்பு எனும் அற்புத பழக்கத்தை மக்களிடையே குறிப்பாக சிறார்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட புத்தகம் மற்றும் சி.டி./டி.வி.டி. கண்காட்சி மே 1 முதல் 4 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.

இது குறித்து கல்விக் குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் கூறியதாவது: கல்விக்குழு, ஐ.இ.டி.சி யுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் சற்று மெத்தனமாக இருந்த நிலை மாறி திரளான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு அதிகளவில் புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தது ஏற்பாட்டாளர்களுக்கு நிறைவினை தந்தது. இந்த கண்காட்சிக்கான அறிவிப்பினை குழுமத்திலும், வலைப்பூவிலும் கண்டு எந்த கோரிக்கையும் வைக்கப்படாமலேயே அதற்காக மனமுவந்து நிதியளித்த சகோதரர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக என தெரிவித்தார்.

வெள்ளி, 9 மே, 2008

12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு


12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு தற்போது 2 மணி நேரம் முன்பு வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி கலிமா மேல்நிலைப்பள்ளி 87 சதவிகிதம் தேர்ச்சி (23க்கு 20 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவிகிதம் தேர்ச்சியும் (102 க்கு 47 பேர் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55 சதவிகிதம் தேர்ச்சியும் (122க்கு 67 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளன. 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்று கலிமா மேல்நிலைபள்ளியை சேர்ந்த சுல்தானி என்கிற மாணவி (10ம் வகுப்பிலும் இவரே முதல் மதிப்பெண்) ஊரின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். முஹம்மது அக்ரம் (கலிமா நகர்) 1200 க்கு 991 மதிப்பெண் பெற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுபஸ்ரீ என்கிற மாணவி 1200க்கு 989 மதிப்பெண் பெற்று பள்ளி முதல் நிலை பெற்றுள்ளார்..

முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள உடனடியாக வழங்கி உதவிய பரங்கிப்பேட்டை கல்விக்குழுவிற்கு வலைப்பூ சார்பில் நன்றி

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முதல் நிலை சாதித்த மாணவ மாணவியரின் பேட்டிகள் வலைப்பூவில் வெளியாகும்.