ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..


தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டை பாலத்தில் வாகனவரி வசூலிப்பை நிறுத்த கோரிக்கை.




பரங்கிப்பேட்டை பக்கிம்காங் கால்வாய் குறுக்கே இருக்கும் பாலத்திற்கு அதன் ஒப்பந்த காலம் முடிந்தும் வாகனவரி வசூல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் மற்றும் வெளியூர் ஆட்களும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் வாகனங்கள் ஊர் உள்ளே வருவதற்கு அதிகம் தயக்கம் காட்டுகின்றனர்.

பலருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த வரம்பு மீறிய வாகனவரியை நிறுத்தகோரி கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (C.W.O.) சார்பில் மவாட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

'நீரின்றி அமையாது உலகு': திருமணங்களில் வீணடிக்கப்படும் குடிநீர்.

எத்தனை வகை வகையாக விருந்தளித்தாலும் அவற்றுடன் குடிக்க தண்ணீர் இல்லையென்றால் விருந்து ருசிக்காது. அந்த வகையில் இன்றைய விருந்துகளில் குடிநீராக பயனபடுவதும் பரிமாறப்படுவதும் பாக்கெட் தண்ணீர் எனப்படும் பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்ட தண்ணீர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வரும் இவ்வகையான பாக்கெட் தண்ணீரில் ஒரு வகையான (பிளாஸ்டிக்) நாற்றம் சேர்ந்து வருவதால் இதனை தற்போது யாரும் விரும்பி அருந்துவதில்லை. திருமண நிகழ்ச்சியின்போது உணவு உண்டபின் கை கழுவுவதற்கே அதிகம் பயன்படும் இந்த பாக்கெட் தண்ணீர் அவசரத்திற்கு மட்டும் (தொண்டையில் உணவு அடைபடும் தருணங்களில்) சிலர் அருந்துகின்றனர். மற்றபடி இதனை அதிகப்படியாக உபயோகிப்பது (குடிப்பதற்கும் சரி, விளையாடுவதற்கும் சரி) குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களே.

கெமிக்கல் கலந்த இன்கினால் பிரிண்ட் செய்யப்படும் தயரிப்பு தேதிகூட (சாப்பாட்டு தட்டின் மீது வைத்து தருவதால் அந்த தேதியும்) மறைந்து அழிந்து சற்று இளஞ்சூடாக தண்ணீர் இருப்பதால் இது பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறார் ஒரு சமூக ஆர்வளர்.

எக்ஸ்ட்ரா தகவல்:
'நீரின்றி அமையாது உலகு'. ஆனால், இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் கும்பல் ஒன்று சென்னையில் ஆங்காங்கே அலைகிறது. அசுத்தமான தண்ணீர் பாக்கெட் மினரல் வாட்டர் என்று விற்ற காலம் போய், இப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரமும், தாம்பரம் பகுதியில் நிக்ரா மினரல் வாட்டர் நிறுவனம் நிக்ரா, மானட்சா, கிளாஸ், ஜாய், இமேஜ் என்னும் பெயர்களில் போலி ஐ. எஸ். ஐ. முத்திரைகளுடன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1986 ஆண்டு இந்திய தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் அம்பதாயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் (ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதிக்கப்படலாம்.

இது போன்ற போலிகள் பற்றி நாம் வேறெங்கிலும் காண்போமேயானால், கீழ்க்காணும் முகவரிகளில் புகார் தெரிவிக்கலாம்:
இந்திய தர நிர்ணய நிறுவனம்,
தென் மண்டல அலுவலகம்,
சி. ஐ. டி. வளாகம்,
4வது குறுக்கு சாலை,
தரமணி, சென்னை – 113.
தொ. பே.: 10914422541087,
மின்னஞ்சல் : sro@bis.org.in