சனி, 20 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: பரங்கிப்பேட்டை பரபரப்பு.

கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.

சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.

நமது நிருபர்

புதுப்பள்ளி பிரச்சனை

புதுப்பள்ளி நிர்வாக தேர்தல் நடக்காததால் நேற்று பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் பரங்கிபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை ஏழு எட்டு மணி அளவில் தொடங்கிய சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை.

இந்த தரப்பில் ஜுபைர், மரைக்கார், லுக்மான், ஷாஜகான், பிலால், ரபி என ஆறு பேரும் அந்த தரப்பில் மாலிக், கஜ்ஜாலி, உக்காஷ், அய்யூப் ஆகிய நான்கு பேரும் ரிமாண்ட் செய்யப்பட்டு கடலூர் சிறைக்கு இரவு பதினோரு மணியளவில் கொண்டு செல்லப்பட்டனர்.

இறைவனின் இல்லத்தை முன்னிட்டு செய்யப்படும் விஷயங்கள் எந்த பெரும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ப்ரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்த வேளையில் இது போன்ற சங்கடம் தரும் கைது நிகழ்வு ஊரின் முஸ்லீம் பொது மக்களிடையே வருத்தத்தினை ஏற்படுத்திஉள்ளது. நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதனால் திங்கட்கிழைமை தான் அவர்கள் அனைவரும் பெயிலில் வர முடியும்.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

புதுப்பள்ளி பரபரப்பு

புதுப்பள்ளி நிர்வாகத்திர்க்கென இன்று ( 19.08.2008) தேர்தல் நடத்த வக்ப் வாரியம் திட்டமிட்டு நாள் குறித்திருந்த வேளையில், பள்ளி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கி விட்டது. அதனால் இன்று தேர்தல் நடக்கவில்லை.

இன்று ஜும்ஆ முடிந்து நீண்ட நேரம் பெரும் கூட்டமாக மக்கள் வெளியில் நின்று இருந்தனர். பள்ளியின் நிர்வாகம் சீரமயாதது குறித்த அதிருப்தி அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் கோர்ட்டில் ஸ்டே கோரி வழக்கு போட்ட ஃபஜூல் மாலிமார் வெளியில் வந்தபோது அவரிடம் சாத்வீகமாக கேள்வி கேட்க்க சிலர் சென்றதாகவும் அதை தொடர்ந்து சிறிது சலசலப்பானது. பிறகு அடி தடியாக ஆனது. பள்ளியில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டிருந்தனர். சில காலம் முன்பு நடந்ததை போல் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று அனைவரும் பயந்து இருந்த நிலையில் பள்ளியினுள் நடந்த இந்த சம்பவத்தை சிலர் தடுத்து அமைதிபடுத்த முயற்சித்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிமிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

நிலைமை சற்று கட்டுக்கடங்குவதற்குள் ஆவதற்குள் போலீஸ் வந்தது. அவர்களுக்கு நிலைமையை ஆரம்பம் முதல் ஜுபைர் விளக்கினார். பிறகு ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் வந்து சேர்ந்தார் . பிறகு வழக்கு கொடுக்க ஒரு தரப்பு யூனுஸ் அவர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். கும்மத் பள்ளியில் ஏற்பட்ட இந்த சம்பவங்களினால் ஊர் முழுவதும் சற்று பரபரப்புடன்தான் வருகிறது.