ஞாயிறு, 21 டிசம்பர், 2008

காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல...

தேவையற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள சில மனிதர்கள் எப்போதும் தங்கள் காதுகளை தீட்டி கொண்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் பரங்கிபேட்டையில் காணப்பட்ட நீண்ட காதுகளை உடைய வித்தியாசமான இந்த ஆடு, அப்படி எந்த செய்தியையும் கேட்க்க ஆவாலாக இருப்பது போல் தெரியவில்லை. நாங்கள் போட்டோ பிடிக்க போஸ் கொடுக்க சொல்லி வற்புறுத்திய போது கூட ஏதும் பேசாமல் மறுத்து விட்டது.

இளம்பிள்ளைவாத தடுப்பு நாள்


இளம்பிள்ளைவாதம் எனும் கொடுமையான நோயை ஒழித்து கட்ட அரசாங்கம் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருடம் தோறும் இரண்டு நாட்கள் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை இலவசமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளித்து வருகிறது. இன்று அந்த நாள். நமதூரில் பல இடங்களில் இதற்கென தற்காலிக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சனி, 20 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: பரங்கிப்பேட்டை பரபரப்பு.

கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.

சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.

நமது நிருபர்