பரங்கிப்பேட்டை மாதாகோவில் பகுதியில் சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சலங்குக்கார தெரு அரசு பள்ளியில் நடைபெற்றது. வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாழ் 363 பேருக்கு ரூ.2000 என்ற அளவிலும், பகுதியளவு பாதிக்கப்பட்ட 45 பேருக்கு ரூ.1000 என்ற அளவிலும் உதவித் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் அதிருப்தியடைந்த சரவணன் என்ற வாலிபர், அனைவருக்கும் ரூ.2000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பயனாளிகள் பெயர்பட்டியலை எடுத்துச்சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர் அசோகன் என்பார் உடனடியாக காவல்துறையில் முறையீடு செய்ய, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊரிலிருந்து எமது செய்தி முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தி நாளேடுகளில் வந்துள்ளதாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
வெள்ள நிவாரண நிதியாக
பதிலளிநீக்குஅம்மா கொடுத்ததை போல இந்த அய்யா-வும் அள்ளிவுட்டிருந்த நல்லா இருந்திருக்கும் அல்லவா?