பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரங்கிப் பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்துக்கு நகர செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
நகர இளைஞரணி செயலாளர் சங்கர், நகர துணை செயலாளர் நாகையன், வார்டு செயலாளர் ஜெய்சங்கர், ஜெயலலிதா பேரவை ரமேஷ், அருள்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ், ஆரூர்நாதன், மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்விராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கனகராஜன், தலைமை கழக பேச்சாளர் தனஜெயராமன், மாவட்ட பேரவை துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பேரவை இணை செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்மணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகர துணை செயலாளர் சம் பந்தம், மாவட்ட பிரதிநிதி குமார், முகமது இக்பால், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர தலைவர் மலை மோகன் நன்றி கூறினார்.
புதன், 2 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக