மழை பெய்வது எல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ்ஆ? என்று நமது வலைப்பூ வாசகர் ஒருவர் முன்பு கேட்டிருந்தார். மழைக்கு நான்கு பேர் பலி, சுவர் இடிந்து இரண்டு பேர் சாவு இதுவெல்லாம் தான் மழை பற்றிய நியூஸ் ஆக நாம் கற்பித்து வளர்க்கபட்டுள்ளோம். உணர்வுகளின் வருடல்கள் தாண்டி மனதை சம்மட்டியால் அடிக்கும் நிகழ்வுகளையும் மழை வெளிக்கொண்டு வரும். உங்களுக்கும் எங்களை போல உணர்வுகள் எனில் உங்களையும் புரட்டிபோடட்டும் இந்த புகைப்படங்கள்.




சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...
சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.
இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......
என்ன செய்ய போகிறோம்..?