தில்லி சாஹிப் தர்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லி சாஹிப் தர்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2008

தில்லி சாஹிப் தர்கா இரண்டாம் பாகம்


நேற்றைய பதிவு நம்மில் சலனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் இல்லாமல் போனாலும் மழை அதன் பணியை செய்ய, மிகப்பெரும் திண்டாட்டமாகி போய்விட்டது அந்த குடியிருப்பு மக்களுக்கு.. பயந்தது போன்றே கிட்டத்தட்ட முழு குடியிருப்பும் மூழ்கிபோய் விட்டது என்றே சொல்லலாம். ஷாதி மஹாலுக்கு பின்புறமுள்ள கோட்டாறு தற்போது மனை பிரிவு போட்டு விற்கப்பட்டு விட்டதால் அங்கு சமபடுத்தப்பட்ட நிலத்தினால் வேறு வடிகால் இன்றி நீர் முழுதும் இந்த குடியிருப்பு நோக்கி பாய,... ஒரு வழியாக முத்துராஜா அவர்களின் முன்முயற்சியால் வாலிபர்கள் இணைந்து மணலை வெட்டி ஒழுங்கு படுத்தினார்கள். அங்கு வந்த மக்தூம் நானா அவர்கள் களத்தில் இறங்கி நீண்ட நேரம் நின்று வேலை வாங்கினார்கள். ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் நிலைமையை நேரில் வந்திருந்து பார்வையிட்டார். தொகுதி எம் எல் ஏ ஊரில் இருந்தும் வரவில்லை. அங்கிருந்த வாலிபர்களின் உடனடி நிதி திரட்டலில் நவாப்ஜான் நானா, (ஐநூறு) சுமையா ஹாஜா பக்ருதீன் நானா (ஐநூறு), மக்தூம் நானா (ஐநூறு), மற்றும் அய்மன் (இரநூற்றி ஐம்பது) கிடைத்தது. அதை கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அரை லிட்டர் பால் வாங்கி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே ஜமாஅத், குடியிருப்புவாசிகளில் சிலரை ஷாதி மஹாலில் குடியேற்றியும், தவ்ஹீத் நானா அவர்களின் முன்முயற்சியால் இரவு உணவு (பரோட்டா) ஏற்பாடு செய்யபட்டும் இருந்தது. ஏழைகளும் இந்த மழைக்காலத்தை நல்லபடியாக கழித்திட துஆ செய்வோம்.










செவ்வாய், 25 நவம்பர், 2008

வரலாறு காணாத மழை




ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.



ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


தகவல்: R.தவ்ஹீத்

மழைக்கால தில்லி சாஹிப் தர்கா

மழை பெய்வது எல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ்ஆ? என்று நமது வலைப்பூ வாசகர் ஒருவர் முன்பு கேட்டிருந்தார். மழைக்கு நான்கு பேர் பலி, சுவர் இடிந்து இரண்டு பேர் சாவு இதுவெல்லாம் தான் மழை பற்றிய நியூஸ் ஆக நாம் கற்பித்து வளர்க்கபட்டுள்ளோம். உணர்வுகளின் வருடல்கள் தாண்டி மனதை சம்மட்டியால் அடிக்கும் நிகழ்வுகளையும் மழை வெளிக்கொண்டு வரும். உங்களுக்கும் எங்களை போல உணர்வுகள் எனில் உங்களையும் புரட்டிபோடட்டும் இந்த புகைப்படங்கள்.
தில்லி சாஹிப் தர்கா - மேல்தட்டு பரங்கிபேட்டைவாசிகளால், ஜகாத் கடமையாக்கப்பட்ட முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு வாழும் ஒரு பரிதாப குடியிருப்பு. சரியாக பெய்யாமல் போன இந்த இரண்டு நாள் மழைக்கே இந்த நிலை. இதோ இன்று பின்னி பெடலெடுக்கும் இந்த பெருமழைக்கு இந்த மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியின் அழுத்தம் இரவுகளிலும் தீரவில்லை.
நம்மால் நடக்க முடியாது - இந்த குடியிருப்பின் நுழைவாயில்


சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...

சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.

இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......

என்ன செய்ய போகிறோம்..?