வியாழன், 27 மார்ச், 2008

அபாய நிலையில் பாலம்




என்றும் மாறாத உண்மைகள் வரிசையில் நீங்கா இடம் பெற்றிருப்பது பரங்கிப்பேட்டை பி.முட்லூர் மோசமான நெடுஞ்சாலை. பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது. சென்ற நவம்பரில் ஜமாஅத் சார்பாக நடந்த ஈத்மிலன் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் இன்னும் 3 மாதங்களில் முழு அளவிலான தரமான சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தும் இன்னும் முடியாதது பரங்கிப்பேட்டை பொதுமக்களுக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தருகிறது. இந்நிலையில் இந்நெடுஞ்சாலையில் அகரம் ரயில்வே கேட்டை தாண்டி வரும் சிறிய பாலம் ஒன்று கடந்த சில வாரங்கள் பெய்த திடீர் பெருமழையில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பாலத்தின் இருபுறமும் சுவர் மற்றும் அடிவாரங்களும் இடிந்தும் பெயர்ந்தும் அவ்வழியே செல்பவர்கள பயத்துடனேயே பாலத்தை கடக்க செய்கின்றன. பாலத்தின் அடியில் இரும்பு முட்டுகொடுத்தலும், பாலத்தின் இருபுறமும் சிவப்பு கொடிகள் நட்டபட்டுள்ளது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. சபிக்கப்பட்ட இந்த சாலை தொடர் விஷயத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினர் காட்டி வரும் பிரசித்திபெற்ற நீண்ட அலட்சியம் இந்த பாலம் உடைந்தால் தான் உடையுமா? என்பது பொதுமக்கள் அச்சம் கலந்த கேள்வியாக உள்ளது.

திங்கள், 24 மார்ச், 2008

மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு


பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்

ஞாயிறு, 23 மார்ச், 2008

கல்விக்குழு சார்பாக மாணவர் நிகழ்ச்சி


கல்விக்குழு சார்பாக 23.03.08 ஞாயிறு காலை 9 மணியளவில் ஓரியன்டல் பள்ளியில் முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கான பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. டி.வி., சினிமா போன்ற பெருகி வரும் அனாச்சாரங்களுக்கிடையில், நமது சிறார்களுக்கான சரியான முன்மாதிரி யார்? என்பதை விளக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்கள பற்றி ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் மாணவர்களுக்கேற்ப அழகிய உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், முஹம்மது(ஸல்) அவர்களின் சிறப்புக்களயும், உலகில் மற்றெவரையும்விட அவர்கள நாம் நேசிக்க வேண்டிய அவசியத்தையும், நடிகர்கள், அரசியல்வாதிகள ரோல்மாடல்களாக எடுக்காமல், நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முஹம்மது(ஸல்) அவர்களயே அழகிய முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என்றும் மாணவமாணவியரிடம் விளக்கி பேசினார்கள். பிறகு, பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிறிய கேள்விபதில் நிகழ்ச்சியும், (குவிஸ்) மாணவர்தம் ஆளுமைதிறன் வளர்க்க பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் (கலந்துகொண்ட அனைவருக்கும்) வழங்கப்பட்டது. இந்நிகழச்சிக்கான அழைப்பு நோட்டிஸ், பேனர் செலவெதுவுமில்லாமல், மஸ்ஜித், பள்ளிகூடங்கள், அதிகாலை குர்ஆன் மக்தப் வகுப்புகளுக்கு சென்று மாணவ மாணவியரை நேரில் சென்று அழைத்தல் போன்ற முறைகள் கையாளப்பட்டன. அனைத்து செலவுகளும் பிள்ளகளுக்கே சென்றடையுமாறு (பரிசுகள், உண்டிகள்) பார்த்துகொள்ளப்பட்டது. சிற்றுண்டியாக, வித்தியாசமாக (சத்தான) சுண்டல், அவுல் மற்றும் பிஸ்கட் தரப்பட்டது.