போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.
தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.

