அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் பழைய சுவருக்கு மேல் கான்கிரீட் அமைத்ததால் ஆத்திரம்!


பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய சுற்றுச் சுவரை அகற்றாமல் அதன் மேல் கான்கிரீட் அமைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத் தினர்.

சுற்றுச்சுவர்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ராஜஸ்தான் அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனையின் சுற்றுச் சுவர் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக இருந்து வந்தது.

அதைதொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசு ரூ.29 லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய சுற்றுச்சுவர், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், பழைய கட்டிடத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

பணி தடுத்து நிறுத்தம்

நேற்று (09.02.2009) காலை மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேலை ஆட்கள் வந்தனர். அவர்கள் ஏற்கனவே இருந்த பழைய சுவரை அகற் றாமலேயே, அதன்மேல் கான்கிரீட் பெல்ட் அமைத்து சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, பழைய சுவரை இடிக்காமல் அதன் மேலேயே சுவர் எழுப்புகிறீர்களே என்று தட்டிக் கேட் டனர். இருப்பினும் அங்கு வேலை செய்த ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பணி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுற்றுசுவர் அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=468083&disdate=2/10/2009&advt=2

சனி, 13 டிசம்பர், 2008

இது ஒரு தொடர்கதை

உலகெங்கும் சமீபத்தில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு போல விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் என்று விஞ்ஞானிகள் முதல் அனைவரும் காட்டுக் கத்தலாய் கத்துவது பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் காதிலேயே விழவில்லை போலும்.

வாரத்தில் பல தடவை மருத்துவமனையின் தண்ணீர் தொட்டி பல மணி நேர கணக்கில் வழிந்து ஓடி அங்கிருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை நிரப்பி மீண்டும் வெளியேறி ஓடி சஞ்சீவிராயர் கோயில் முச்சந்தி வரை வந்தாலும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
புதிய கட்டிடத்திலும் அதே நிலை அங்கிருக்கும் நீர் தொட்டி வழிந்து..... (கடந்த வரியை படித்து கொள்ளுங்கள்).

நீர் இறைக்கும் மோட்டார் இந்த மின்வெட்டு காலத்திலும் கதற கதற ஓடிக்கொண்டே இருக்கும். மின்சாரமும் மோட்டாரும் இவர்கள் வீட்டுடையது அல்லவே. அரசாங்கத்தினுடையது தானே.... யார் கேட்க போகிறார்கள்?.

மின்சாரம், பொது சொத்துக்கள், இயற்கை வளம் விரயம், என்று வீணடிப்புக்களில் காட்டும் அலட்சியத்தை நோயாளிகள் மீதும் காட்டி விடுவார்களோ என்று தான் பயமாக உள்ளது.
இனியாவது இதை கவனித்து சரி செய்யுமா மருத்துவமனை நிர்வாகம்?
(பத்திரிகை நாகரீகம் கருதி பல பல முறை சுட்டி காட்டிய பிறகே இச்செய்தி வெளியிடப்படுகிறது)

திங்கள், 7 ஜூலை, 2008

இதுவும் கடந்து போகும்...! இன்னும் எத்துனை மாதங்களுக்கு?

இராஜஸ்தான் நிதியுதவிடன் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டிலிருந்தே காத்துக் கிடக்கின்றன அரசு மருத்துவமனையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். இதோ! இதோ வருகிறோம்!! இதோ வந்துட்டோம் என்று மாதம் மாதம் ஒரு தேதியை அறிவிக்கிறார்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள்(?). இரண்டு கட்டிடங்களுமே அத்தியாவசிய பணிகளான மருத்துவம் மற்றும் கல்விக்கென தெரிந்திருந்தும் கூட இவர்கள் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்று புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஏமாற்றங்கள் எல்லாம் வாடிக்கையான விசயமாய் ஆகிவிட்டது வெகுஜன மக்களுக்கு.

போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.

தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கூகிள் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மின்னஞ்சல் மற்றும் ஃபாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருவதால் பொறுமையிழந்து, பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.
இதுகுறித்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் இவர்கள் இப்படித்தான் இழுத்தடிப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போரடினால்தான் இது முதலமைச்சர் செல்லிற்கு போகும் என்று தன்னுடைய கருத்தை கூறினார்.

திங்கள், 4 பிப்ரவரி, 2008

எதற்கு இந்த காத்திருப்பு?


இராஜஸ்தான் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்ட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இப்புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் பூட்டிய நிலையிலேயே உள்ளது. அடுத்த மாதம், அடுத்த வாரம் என்றே நாட்கள் ஓடிவிட்ட நிலையில் இதுவரை எந்த புதிய தகவலும் திறப்பு விழா பற்றி கிடைக்கவில்லை. கடைசியாக பேரூராட்சி வட்டாரம் வாயிலாக கிடைத்த தகவலின்படி, ஒரு முக்கிய அமைச்சரின் தேதி கிடைக்காததினால்தான் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, விரைவில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அந்த முக்கிய அமைச்சர் வர இருக்கிறார்கள், அதற்காக முழு மூச்சுடன் பேரூராட்சி தலைவர் செயல்நிலையில் இருப்பதாகவும் அறியப்பட்டது.
புதிய மருத்துவமனை திறக்கப்படவுள்ள இந்நிலையில், மருத்துவமனைக்கு வேண்டிய போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேர மருத்துவர் ஒருவரை உடனே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.