ஞாயிறு, 14 டிசம்பர், 2008

வெள்ள நிவாரண பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பரங்கிபேட்டை தில்லி சாஹிப் தர்கா மற்றும் புது நகரில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு கட்ட சுமார் 6000 தென்னங் கீற்றுக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரால் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரான முத்துராஜா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெள்ள நிவாரணத்தொகை: ஒரு அதிருப்தி சம்பவம்.

பரங்கிப்பேட்டை மாதாகோவில் பகுதியில் சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சலங்குக்கார தெரு அரசு பள்ளியில் நடைபெற்றது. வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாழ் 363 பேருக்கு ரூ.2000 என்ற அளவிலும், பகுதியளவு பாதிக்கப்பட்ட 45 பேருக்கு ரூ.1000 என்ற அளவிலும் உதவித் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் அதிருப்தியடைந்த சரவணன் என்ற வாலிபர், அனைவருக்கும் ரூ.2000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பயனாளிகள் பெயர்பட்டியலை எடுத்துச்சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் அசோகன் என்பார் உடனடியாக காவல்துறையில் முறையீடு செய்ய, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊரிலிருந்து எமது செய்தி முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தி நாளேடுகளில் வந்துள்ளதாம்.

சனி, 13 டிசம்பர், 2008

சிந்தனைக்கு: சிறுதுளி பெருவெள்ளம்.


சிறுதுளி தானே என்று அலட்சியமாகக் கருதி நமது வாழ்வியல் ஆதாரங்களான நீர், மின்சாரம்ஆகியவற்றின் சிற்றளவுகளை வீணடிப்பதால் ஏற்படும் இழப்பு குறித்த விழிப்புணர்வு - நமது முன்னாள் குடியரசுத்தலைவர் பார்வையில்....கணினியை முன்வைத்து.

(பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் சொடுக்குங்கள்)