
எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற பகுதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் படிவம் 18 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.ஆனால் (மூல சான்றிதழை உடன் கொண்டுச்செல்லவேண்டும்)
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.htmlதெரிந்துகொள்ளலாம்.



தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நன்றி: தினமணி
பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.


அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் தொடங்கியது இந்த வருடத் தியாகத் திருநாள் தொழுகை.


கடந்த சில நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன் பிடி விசைப்படகுகள் நேற்று முதல் கடலுக்குள் சென்றன வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவுறித்திருந்தது. இதனால் கடந்த வாரம்முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 7ம் தேதி இரவு''ஜல்'' புயல் சென்னை - நெல்லூருக்குமிடையே கரையை கடந்தது நேற்று முதல் மீன் பிடிக்க விடுக்கபட்டிருந்த எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் விலக்கிக் கொள் ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனவர்கள் விசைப் படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.




கடலூரில்லிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள பெரியகுமட்டி கிராமம் அருகே வயல்வழியில் இருக்கும் பனைமரத்தில் சில இடங்களில் விஷவண்டுக்கள் கூடுக்கட்டி இருந்தன இவை அந்தவழியாக செல்பவர்களுக்கு தொந்தரவுக்கொடுத்து வந்தன இதனைஅறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்துச்சென்று விஷ வண்டுக்களை அழித்து பொதுமக்களை வண்டுக்களின் கடியில்யிருந்து காப்பாற்றினர்.





இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
