ஞாயிறு, 26 ஜூலை, 2009
இறப்புச் செய்தி
அல்-மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக்கல்லூரி ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!


சனி, 25 ஜூலை, 2009
சிதம்பரம் பகுதியில் தொடரும் தீ விபத்துகள்
வெள்ளி, 24 ஜூலை, 2009
இறப்புச் செய்தி
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வியாழன், 23 ஜூலை, 2009
இறப்புச் செய்தி
புதன், 22 ஜூலை, 2009
இன்றைய சூரிய கிரகண காட்சிகள்
இன்றைய சூரிய கிரகண காட்சிகள்
செவ்வாய், 21 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை - சிதம்பரம் 13 கி.மீ. பயண தூரத்தில்
திங்கள், 20 ஜூலை, 2009
மாற்றம் வரும் வரை தனித்துதான் செயல்படுவோம் - த.த.ஜ (TNTJ)

வியாழன், 16 ஜூலை, 2009
கடலில் காற்று வீசுவதால் பரங்கிப்பேட்டையில் மீன் விலை திடீர் உயர்வு
இதனால் நேற்று பரங்கிப்பேட்டையில் மீன் விலை திடீரென உயர்ந்தது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை அன்னன்கோயிலில் ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு மத்தி, சூரை மீன் வகைகள் அதிகளவு கிடைத்தது.
இதனால் இங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினமும் சுமார் 20க்கு மேற்பட்ட லாரிகளில் ஏற்றுமதி செய்ததால் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தது.
இந்நிலையில் சில நாட்களாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
நேற்று கடலில் காற்றின் தாக்கம் அதிகம் இருந்ததால் மீனவர்கள் வலையை விரித்து மீன் பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.
இதனால் வெளிமாநிலங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும் மத்தி, சூரை மீன்கள் வரத்து குறைந்ததால் 500 ரூபாயிற்கு விற்கும் ஒரு பாக்ஸ் மீன் நேற்று ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது.
இதனால் நேற்று கேரளாவிற்கு ஐந்து லாரிகளில் மட்டுமே மீன் கொண்டு செல்லப்பட்டது.
புதன், 15 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐந்து லட்சம் செலவில் ஆழப்படுத்தப்பட்ட குளம் மக்களுக்கு பயன்படாத அவலம்
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் சந்தைதோப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2007-2008) ஐந்து லட்சம் ரூபாய் செலவில் குளம் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.
ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமல் பெயரளவில் குளத்தில் இருந்த மணலை ஒதுக்கி விட்டு, கரைப்பகுதியில் கல் அடிக்கப்பட்டது.
குளத்தை முழுமையாக தூர் வாரி சரி செய்யாததால் கடந்த நவம்பரில் ஏற்பட்ட மழையில் குளத்தில் தண்ணீர் தேங்கி குளம், தூர்ந்து, எவ்வித பயன்பாடும் இன்றியுள்ளது.
இந்த குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி
முகாமில் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பாடம் குறித்து நான்கு கட்டங்களாக நடந்தது.
தலைமை ஆசிரியை மெர்சிஜாய் முன்னிலை வகித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவசண்முகம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துசுகுமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்து ஆலோசனைகள் மற்றும் படைப்பாற்றல் கல்வி குறித்து பேசினார்.
முகாமில் பங்கேற்ற 128 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் மாறன், ஜெயராமன், பாலமுருகன், பூங்கோதை, மாலதி, மஞ்சுளா, பாஸ்கர், கே.பாஸ்கரன், பிரியதர்ஷினி, வேம்பு பயிற்சி அளித்தனர்.
இறப்புச் செய்தி
தியாகுச் செட்டி தெரு, மர்ஹும் ஹனிபா மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் காதர் மஸ்தான் அவர்களின் மருமகனாரும், பாவா மரைக்காயர் அவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது, ஜாஃபர் அலி, இவர்களின் தகப்பனாரும், அலி ஆஜம், ஜாக்கீர் உசேன் இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி H. கிதர் முஹம்மது அவர்கள் மர்ஹும்ஆகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
செவ்வாய், 14 ஜூலை, 2009
சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு தெரிவிக்க "சைரன் ஒலி" எழுப்பும் கருவி

பரங்கிப்பேட்டை- பு.முட்லூர் சாலை ரூ.13 கோடி மதிப்பில் விரிவாக்க பணி
பரங்கிப்பேட்டையில் இருந்து பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை ஏழு கிலோ மீட்டர் நெடுஞ்சாலைதுறை சாலை உள்ளது.
சாலையை அப்பகுதியில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் மற்றும் கனரக வாகங்கள், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சாலை வழியாக சென்று வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலை மிகவும் மோசமான நிலைக்கு மாறியது.
வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றன.
அகரம் ரயிலடி அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு வந்து செல்கின்றன.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 13 கோடி ரூபாய் மதிப்பில் பரங்கிப்பேட்டை- பு.முட்லூர் சாலையை அகலப்படுத்தி, ரயிலடி அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
திங்கள், 13 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி குளத்தின் மேற்கு கரை சரிவு
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இது கரையை ஒட்டியிருக்கும் நடைபாதையும் சரியும் அபாயம் உள்ளது.
எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்பே இதை மீராப்பள்ளி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இல்லையெனில் சேதம் இன்னும் அதிகமாகவே ஆகும்.
பரங்கிப்பேட்டை விவசாயிகள் கவனத்துக்கு...
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
'மண் வளத்தை பாதுகாத்து உரச்செலவை குறைக்கவல்ல உயில் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும், பயிருக்கு தேவையான நுண்ணூட்டங்களும் தேவையான இருப்பு உள்ளது. விவசாயிகள் மேற்கண்ட இடுபொருள்களை பெற்று பயன்பெற வேண்டும்' என அறிக்கையில் தெரிவித்தார்.
ஞாயிறு, 12 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக மனித உரிமை ஆணையத்திடம் மீனவர் புகார்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சி. புதுப்பேட்டை சின்னூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரப்பசெட்டி.
இவரது மகன் ஆறுமுகம்.
இவர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இது குறித்து அந்த பெண் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கிராம முக்கியஸ்தர்கள் பேசி சமாதானம் செய்தனர்.
அதையடுத்து நான் மீன்பிடிக்க சென்று விட்டேன்.
அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணை சரியில்லை என்று கிராம பஞ்சாயத்தார் என்னை மீண்டும் விசாரணைக்காக அழைத்தனர்.
அப்போது நான் தொழிலுக்கு சென்றதால் கால தாமதம் ஆகிவிட்டது.
அதன் பிறகு நாங்கள் கூப்பிட்டு நீ வரவில்லை என்று எனது ஊரில் எனக்கு சாதிக் கட்டுப்பாடு செய்து விட்டார்கள்.
அன்று முதல் குடி தண்ணீர் கூட பிடிக்க முடியவில்லை.
எனது குடும்பத்தாருக்கும், எனக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனது பேரக்குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அங்கேயும், பேச மறுக்கின்றனர்.
ஊரில் நல்லது, கெட்டது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
இது பற்றி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தேன்.
ஆனால் அவர்கள் போலீஸ் நிலையம் வரவில்லை.
ஆகவே எனது குடும்பத்தின் மீதும் கருணை கொண்டு எனது இயல்பு நிலையை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
பரங்கிப்பேட்டை பகுதியிலுள்ள கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துவிடாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டப்படுமா?
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.
இந்த மீனவ கிராமங்கள் அனைத்தும் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பெரும் சேதம் ஏற்பட்டது.
அதன்பிறகு மீனவர்கள் தனது சகஜ நிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆனது.
இந்த நிலையில் சின்னூர், புதுக்குப்பம், புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரப் பேட்டை, மடவாப்பள்ளம், அய்யம் பேட்டை, அன்னப்பன் பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெரியக்குப்பம் கிராம கடற்கரையோரம் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
இதனால் கடற்கரையோரம் உள்ள மணல் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் செல்லும் நிலையில் உள்ளது.
சுமார் 20 அடிக்கு மேல் அலை வீசி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே கடற்கரையோரம் நிற்கும் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாக வேரோடு சாய்ந்து வருகின்றன.
குடிசைகள் காற்றில் பறக்கின்றன.
இதனால் தினந்தோறும் இப்பகுதி மீனவ மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆகவே இப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ பெரியக்குப்பம் கடற்கரை யோர பகுதிகளில் தரமான தடுப்பணைகள் கட்ட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சனி, 11 ஜூலை, 2009
இறப்புச் செய்தி
பரங்கிப்பேட்டையில் துறைமுகம்
The State government has sanctioned three captive ports and a jetty to be developed at a total investment of Rs.3,350 crore.
The sites for the captive ports are Paramankeni village in Kancheepuram district, Udangudi in Tuticorin and Parangipettai in Cuddalore. The captive jetty will come up near Poompuhar in Nagapattinam district. All these facilities will handle coal for proposed thermal power projects.
The Paramankeni port, estimated to cost Rs.1,500 crore, is meant for an ultra mega power project of 4,000 megawatt at Cheyyur. The Rs.350-crore Udangudi port will cater for the 1,600-MW Udangudi plant and the Rs.1,000-crore Parangipettai port for the 4,000-MW power plant. The Rs.500-crore Poompuhar jetty will serve the 1,320-MW plant.
இறப்புச் செய்தி
புதன், 8 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை அருகே பூவாலை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் ஆபத்து - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகின்றனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சியில் இருந்து வயலாமூர் வரை உள்ள கிராம நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில் பூவாலை அருகே பெரிய வாய்க்கால் பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் பஸ், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இப்பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்து விட்டன.
தற்போது பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் மொட்டையாக காணப்படுகிறது.
தற்போது இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது.
மேலும் பாலத்தில் மின் விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களுக்கு கண்டிப்பாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பொது மக்களின் நலன்கருதி வில்லியநல்லூர் - பூவாலை சாலையில் உள்ள பாலத்தின் இரண்டு புறமும் உடைந்துள்ள தடுப்பு கட்டைகளை உடனடியாக கட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பரங்கிப்பேட்டைக்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பரங்கிப்பேட்டைக்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு
செவ்வாய், 7 ஜூலை, 2009
பரங்கிப்பேட்டை அருகே கோஷ்டி மோதல் - 10 பேர் கைது
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு ஆடி திருவிழா கொண்டாடுவது குறித்து நேற்று முன்தினம் ஊரில் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் திருவிழா கொடுப்பதற்கு வீட்டுக்கு ரூ.300 வசூல் செய்ய வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.
மேலும் பணம் போதுமானதாக இல்லையென்றால், அதே ஊரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் (வயது 32) செலவிடுவார் என்று கூறப்பட்டது.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ரகு என்பவர், ஜெயக்குமார் தலைமையில் திருவிழா நடத்துவதா என்று கூறி திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஜெயக்குமார், ரகுவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
வாய்த் தகராறு முற்றி கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் ரகு ஒரு கோஷ்டியாகவும், ஜெயக்குமார் ஒரு கோஷ்டியாகவும் கட்டை, இரும்புபைப் போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர்.
இது பற்றி புதுச்சத்திரம் போலீசில் ரகு தரப்பை சேர்ந்த பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் (26), தம்பிராஜா (23), பாபு (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரகு தரப்பை சேர்ந்த பரந்தாமன் (21), முத்தையன் (55), பாவாடை (40), பாஸ்கர் (35), பாலு மனைவி கலா (35), அல்லிமுத்து (35), லட்சுமணன் (31) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை - 4 பேர் கைது
அதன்பேரில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா, மகேஷ்வரி மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பரங்கிப்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீதர் (வயது 37), சாலக்கார தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் கிருஷ்ண மூர்த்தி (35), பீட்டர் தெருவை சேர்ந்த முகமது சுல்தான் மகன் முஜிப் (32), பரங்கிப்பேட்டை சின்னக்கடையை சேர்ந்த உதுமான் மகன் பரகத் அலி (31) ஆகிய 4 பேரும் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்து வந்தனர்.
அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த பெட்ரோல், டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் சிதம்பரத்தில் லைசன்ஸ், பெர்மிட் இல்லாமலும், ஒரு வழிப்பாதை வழியாக சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திங்கள், 6 ஜூலை, 2009
சில நிமிடங்களில் கருகி காலி கொட்டகையானது வெல்டிங் ஷாப்

நெல்லுக்கடை தெருவில் கீற்று கொட்டகையில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்தது.
இன்று இந்த பட்டறையில் தினசரி வேலை நடந்துகொண்டிருந்த போது, சிறிய தீப்பொறி கொட்டகையில் தெறித்து தீ பரவியது.
ஆனால் சில நிமிட நேரங்களில் தீ கொட்டகை முழுதிற்கும் பரவியதினால் அணைக்க முயற்சித்தும் பலனற்று கருகிப் போனது.
அதிகப் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டாலும், வெல்டிங் பட்டறைகள் இதுபோன்று கொட்டகையில் பாதுகாப்பின்றி குடியிருப்பு பகுதிகளுக்கிடையே இயங்குவது சட்டவிதிகளுக்கு முரணானது.
இனிமேலாவது இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கீற்று கொட்டகையை தவிர்க்க வேண்டும் என்றார் அருகில் கடை வைத்திருக்கும் கடைகாரர் ஒருவர்.
பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு!

அதிரடி போஸ்டர்களும் குமுறல்களும்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரங்கிப்பேட்டை நகருக்கு வருகை புரிந்தார்.
இவருடைய திடீர் வருகையினால் செய்வதறியாது திகைத்து நின்ற நகர சிறுத்தைகள் அதிரடியாக நன்றி அறிவிப்பு போஸ்டர்களை வீதியெங்கும் சுவர்களில் ஒட்டினர்.
ஆனால் இது சிலருக்கு (வீட்டு உரிமையாளர்கள்) சற்று கோபத்தை வரவழைத்தது. தேர்தலின் போதுதான் அனுமதியின்றி எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றார்கள்.

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்ணாமலை கடல்வாழ் உயிரியல் கல்லூரி அரங்கத்தில் நேற்ற மாலை நடைபெற்றது.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார்.
புதிய நிர்வாகிகளாக O.A.W. பாவாஜான் புதிய தலைவராகவும், M. இராதாகிருஷ்ணன் புதிய செயலாளாளராகவும், A.K.T. அன்சாரி புதிய பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
பொருப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகள் விபரம்:
- தலைவர்: O.A.W. பாவாஜான்
- செயளாளர்: M. இராதாகிருஷ்ணன்
- பொருளாளர்: A.K.T. அன்சாரி
- து. தலைவர்கள்: Er. P. அருள்வாசகம், K. அரசு, T. ஜெயராமன்
- து. செயளாளர்: A. காஜா அமினுத்தீன்
- து. பொருளாளர்: M. ஹமீது சுல்தான்
- P.R.O. : M.S. சுல்தான் சேட்
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம், பேரா. அஜ்மல் கான் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பரங்கிப்பேட்டையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!
பரங்கிப்பேட்டை மீனவ கிராமங்களில் போலீசார் விழிப்புணர்வு கூட்டம்
கடற்கரை மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துமாறு போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பில் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார் பேட்டை, வேளங்கிராயன் பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா, வீரமணி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வெளிநபர்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கடலில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் மாயமானாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் புகைப்படத்துடன் மொபைல் போன் நம்பர்களை சேகரித்தனர்.
சனி, 4 ஜூலை, 2009
ஐந்து ஆண்டுகள் முழுவதும் தொடர்ந்து முஸ்லிம்களுக்காக பாரளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: திருமா உறுதி.

பரங்கிப்பேட்டை: பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பரங்கிப்பேட்டைக்கு வருகைபுரிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
அப்போது அவர் பேசியதாவது:
நாடாளுமன்ற அவையில் பேசுவதற்கான அனுமதி பெறுவதற்கே மனு கொடுத்து, மன்றாட வேண்டியிருக்கிறது. பிரதமர் இல்லாத அவையில் என்னைப் பேசச் சொன்னபோது, நான் மறுத்தேன். 'நாளை பேசுகிறேன்' என்றேன். ஆனால், 'இன்று நீங்கள் பேசவில்லை என்றால், இந்த அமர்வில் பேசவே முடியாது' என்றார்கள். அதிலும் எனக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ஐந்து நிமிடங்கள். என்னைப் போல் 'கடமைக்கு'ப் பேசக் காத்திருந்த 20 உறுப்பினர்கள் இருந்த அவையில் முடிந்த அளவுக்கு என் கருத்துக்களைப் பதிவு செய்தேன்.
அந்த முதல் பதிவின்போதுகூட பாபர் மஸ்ஜித் பிரச்சினை வ pரைந்து முடிக்கபட வேண்டும் என்று குரல் எழுப்பினேன்ற. நேற்றுகூட லிபரான் அறிக்கை குறித்து லாலு பிரசாத் தெரிவித்த கருத்தை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடுநிலையான எனது கருத்தை நான் அங்கு வைத்தேன். இன்னும் தொடர்ந்து 5 ஆண்டுகள் முழுவதும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.
அரசு பெண்கள் பள்ளிக்கும், புதிய பேருந்து நிறுத்தங்களுக்கும் நிதி ஒதுக்கீடு

பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தரிவித்து பரங்கிப்பேட்டைக்கு வருகை புரிந்த தொல். திருமாவளவன் தனது பாரளமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேரூராட்சி தலைவரும், ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் கேட்டு கொண்டமைக்கு பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் இரு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
அது மட்டுமின்றி பரங்கிப்பேட்டையில் இரு புதிய பேருந்து நிறுத்தங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
கொட்டும் மழையில் நன்றி கூறினார் திருமா

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதன் முறையாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தொல். திருமாவளவன் இன்று மாலை 7 மணியளவிற்கு பரங்கிப்பேட்டை நகருக்கு வருகைபுரிந்தார். அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாது சஞ்சீவிராயர் முனையில் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். திறந்த வேனில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸூம் உடன் சென்றார்.
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...